வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி… முகமூடி கொள்ளையனுக்கு போலீஸ் வலை…

 

வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி… முகமூடி கொள்ளையனுக்கு போலீஸ் வலை…

சேலம்

சேலத்தில் நள்ளிரவில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் பள்ளப்பட்டி புதிய பேருந்து நிலையம் பகுதியில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது, ஏடிஎம் மையத்தின் கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி… முகமூடி கொள்ளையனுக்கு போலீஸ் வலை…

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, முகமூடி அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றது தெரியவந்தது.

கொள்ளை முயற்சியின் போது, ஏடிஎம்மில் இருந்த அலாரம் ஒலித்ததால் அந்த நபர் தப்பியோடியதும் தெரிய வந்தது. இதனால் ஏடிஎம்மில் இருந்த லட்ச கணக்கான ரூபாய் பணம் தப்பியது. இது குறித்து வங்கி அதிகாரிகள் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி பதிவு அடிப்படையில் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.