வெட்டுக்கிளி படையெடுப்பு… மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம்: முன்கூட்டியே கணிக்கப்பட்ட பஞ்சாங்கம்!

 

வெட்டுக்கிளி படையெடுப்பு… மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம்: முன்கூட்டியே கணிக்கப்பட்ட பஞ்சாங்கம்!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 60 லட்சத்து 26 ஆயிரத்து 375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெட்டுக்கிளி படையெடுப்பு… மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம்: முன்கூட்டியே கணிக்கப்பட்ட பஞ்சாங்கம்!

அதனாலோ என்னவோ இந்த ஆண்டு வந்ததும் சரி போவதும்சரி திருப்திகரமாக இல்லை. அதுமட்டுமின்றி வெட்டுக்கிளி படையயெடுப்பு, நிலநடுக்கம் என அடுத்தடுத்து பல இயற்கைக்கு எதிரான நிகழ்வுகள் நடந்து வருகிறது.

வெட்டுக்கிளி படையெடுப்பு… மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம்: முன்கூட்டியே கணிக்கப்பட்ட பஞ்சாங்கம்!

இந்நிலையில் இதுகுறித்து கா.நா. சுந்தர்ராஜன் அய்யர் எழுதிய பஞ்சாங்கத்தில் ஏற்கனவே மேற்கூறிய ஆபத்துக்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ‘இவ்வாண்டு வெட்டுகிளி பூச்சிகளின் ரீங்காரம் செய்தலும்,சன்யாசிகள் அரசியலுக்கு பொருளுதவியும் செய்வர். இந்த ஆண்டு சிறு நில நடுக்கம் ஏற்படும் . குறிப்பாக திருச்சி, மதுரை, சிவகாசி, திருநெல்வேலி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, வேலூர், ஆம்பூர் ,வாணியம்பாடி ,தர்மபுரி ,சேலம் ,ஈரோடு, கோயம்புத்தூர், பெங்களூர், மைசூர் மற்றும் பம்பாய் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்படும்… வங்க கடலின் மைய கடல் பகுதியில் பெருத்த நிலநடுக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக பெரும் புயல் உற்பத்தியாகி தமிழ்நாடு, கர்நாடகா, பம்பாய், கல்கத்தா, கேரள மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகும். தமிழ்நாட்டில் பல தாக்கம் பல இன்னல்களை சந்தித்து பல சோதனைகளை முடித்து விடைபெற்று ஸ்ரீ சீதா ராம லட்சுமணர் அனுமந்தர் அருளால் சர்வமங்களம் உண்டாகும் படி பிராத்திக்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.