கொரானாவைத்தான் வளர்க்கிறோம் ,குழந்தையை வளர்க்க முடியல – குஸ்கா விற்பது போல குழந்தையை விற்ற பெற்றோர் ..
அஸ்ஸாமின் கோக்ராஜர் மாவட்டத்தில் வசிக்கும் மூன்று குழந்தைகளின் தந்தை, தீபக் பிரம்மா குஜராத்தில் வேலை பார்த்துவிட்டு, கொரானாவால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக புலம் பெயர்ந்து சொந்த கிராமமான
டோண்டுலா மந்தரியாகானை அடைந்தார். ஆனால் சொந்த ஊருக்கு வந்தாலும் கொரானாவால் இங்கும் அவருக்கு நிலையான வேலை கிடைக்கவில்லை .இதனால் மூன்று குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டார் .ஒரு வேலை உணவு கூட குழந்தைகளுக்கு தர முடியாததை எண்ணி மனமுடைந்தார் .
இதனால் தன்னுடைய ஒரு மாத பெண் குழந்தையை விற்க முடிவு செய்தார் .அதனால் அக்கம் பக்கத்திலிருப்பவர்களிடம் தன்னுடைய ஒரு மாத பெண் குழந்தையை விற்க இருப்பதாகவும் ,யாராவது குழந்தை இல்லாதவங்க கேட்டா நல்ல விலைக்கு கொடுக்க தயாரா இருப்பதாக கூறினார் .அதை கேட்டு அனைவரும் அதிச்சியடைந்தனர் .குவளையை விற்கிற மாதிரி இப்படி குழந்தையை விற்கிறேன்னு சொல்கிறாரேன்னு பலர் ஆச்சர்யப்பட்டனர் .
இந்த தகவல் ஊர் முழுவதும் பரவியதன் காரணமாக, அந்த ஊரில் குழந்தை இல்லாத ஒரு தம்பதியினர் அந்த குழந்தையினை 45000 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி சென்றனர் .
இந்த தகவலை கேட்ட சில கிராமவாசிகள் இந்த விஷயத்தை தொண்டு நிறுவனத்திடம் புகாரளித்தனர் .இதனால் அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் கொக்ராஜர் போலீசாரின் கூட்டு முயற்சியால் அந்த பெண் குழந்தை அவர்களிடமிருந்து மீட்கப்பட்டது.
போலீசார் இந்திய தண்டனைச் சட்டத்தின் 370 வது பிரிவின் கீழ் அவர்கள் மீது காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது, அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.