டிக்டாக் செய்து கொண்டே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளம்பெண்… காதல் தோல்வியால் எடுத்த விபரீத முடிவு!

 

டிக்டாக் செய்து கொண்டே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளம்பெண்… காதல் தோல்வியால் எடுத்த விபரீத முடிவு!

அஸ்ஸாமின் நல்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் ஒருவர் டிக்டாக் வீடியோ செய்து கொண்டே தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்பாரி மாவட்டத்தில் உள்ள போர்குரா ரயில்வே கேட்டில் இந்த அதிர்ச்சிகர நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் டிக்டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தனது பெற்றோரைக் குறிப்பிட்டு தான் தற்கொலை செய்யப்போவதாகக் கூறியுள்ளார். பின் ஓடும் ரயில் முன் பாய்ந்து உயிரை விட்டுள்ளார்.

டிக்டாக் செய்து கொண்டே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளம்பெண்… காதல் தோல்வியால் எடுத்த விபரீத முடிவு!

அந்த வீடியோவில் “நான் அவரை மிகவும் நேசித்தேன். நான் யாரை மிகவும் நேசித்தேனோ அவர் என்னை விட்டுப் போய்விட்டார். நான் இப்போது ரயிலுக்காக காத்திருக்கிறேன். நண்பர்கள் அனைவர்க்கும் ஃபை. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். நான் இறக்க விரும்பவில்லை. என் இதயம் படபடக்கிறது. ஆனால் எனக்கு வேறு வழியில்லை. லவ் யூ மா (அம்மா), லவ் யூ அப்பா , தயவுசெய்து நன்றாக வாழுங்கள், என் சகோதரனை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார். தகவலின்படி, அந்த இளம்பெண் காதலித்தவரும் ஒரு நாள் முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர், போலீசார் அந்த இடத்தை அடைந்து சிறுமியின் சடலத்தை மீட்டனர். ரயில் வேகமாகவந்துகொண்டிருந்த போது அந்தப் பெண் ரயில் முன்பாய்ந்ததைப் பார்த்தோம் என லோகோபைலட் தெரிவித்துள்ளார். “தகவல் கிடைத்ததும் நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசடலத்தை மீட்டுள்ளோம்”என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.