“படிக்க சொன்ன பெற்றோரை துடிக்க செய்த மகன்” -சிறுவன் செஞ்ச வேலைய பாருங்க..

 

“படிக்க சொன்ன பெற்றோரை துடிக்க செய்த மகன்” -சிறுவன் செஞ்ச வேலைய பாருங்க..

தன்னை என்னேரமும் படிக்க சொன்ன பெற்றோரிடமிருந்து பணம் பறிக்க ஒரு சிறுவன் தன்னை யாரோ கடத்தி வைத்ததுபோல ஒரு நாடகம் நடத்திய சம்பவம் போலீசாரை கோபத்தில் ஆழ்த்தியது .

“படிக்க சொன்ன பெற்றோரை துடிக்க செய்த மகன்” -சிறுவன் செஞ்ச வேலைய பாருங்க..

பெங்களூரு கனக்புராவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அக்‌ஷய்.அந்த சிறுவன் இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் பாட புத்தகத்தை படிக்காமல் ஊர் சுற்றி வந்துள்ளார் .அதனால் அந்த ஊரில் மிகப்பெரிய துணிக்கடை உரிமையாளரான அவரின் தந்தை அந்த சிறுவனை கண்டித்துள்ளார் .மேலும் செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார் .
அதனால் அந்த சிறுவன் அவரின் தந்தையிடமிருந்து பணம் பறிக்கவும் ,மேலும் தன்னை படிக்க சொல்லாமலிருக்கவும் ஒரு திட்டத்தை தீட்ட முடிவு செய்தார் .அதனால் அன்றிரவு பல க்ரைம் சினிமாக்களை பார்த்தார் .அதிலொரு கன்னட சினிமாவான ‘ஆபரேஷன் அலமேலம்மா’ என்ற சினிமாவில் வரும் சம்பவம் போல ஒரு நாடகம் போட திட்டமிட்டார் .
அதன் படி நவம்பர் 1ம் தேதி தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு திருப்பதிக்கு சென்று விட்டார் .அங்கு ஓர் லாட்ஜில் ரூம் போட்டு தங்கினார் .பின்னர் தன்னை யாரோ கடத்தி வைத்திருப்பது போல் ஒரு போட்டோவை எடுத்து அந்த போட்டோவை தன்னுடைய தந்தையின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பினார் .மேலும் அதில் உடனடியாக ஐந்து லட்ச ரூபாய் பணத்தோடு வருமாறு கூறினார் .அதை பார்த்து துடித்துப்போன அவரின் பெற்றோர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார்கள் .போலீசார் வழக்கு பதிந்து ஒரு தனிப்படை அமைத்தார்கள் .அதன்படி போலீசார் அந்த போன் நம்பரை ட்ரெஸ் செய்து பார்த்த போது இது அந்த சிறுவன் நடத்திய நாடகம் என்பதை கண்டறிந்தார்கள் .பின்னர் அந்த சிறுவனை கைது செய்தார்கள் .

“படிக்க சொன்ன பெற்றோரை துடிக்க செய்த மகன்” -சிறுவன் செஞ்ச வேலைய பாருங்க..