இப்பம் கிரெட்டா துன்பெர்க்.. அடுத்து சான்டா கிளாஸ் மீது எப்.ஐ.ஆர்.? டெல்லி போலீஸை கிண்டலடிக்கும் ஓவைசி

 

இப்பம் கிரெட்டா துன்பெர்க்.. அடுத்து சான்டா கிளாஸ் மீது எப்.ஐ.ஆர்.? டெல்லி போலீஸை கிண்டலடிக்கும் ஓவைசி

கிரெட்டா துன்பெர்க்கை தொடர்ந்து, விலங்குகளை கொடுமைப்படுத்தியதாக சான்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) பெயரை எப்.ஐ.ஆரில் சேர்க்க போறீங்களா என்று டெல்லி போலீஸை அசாதுதீன் ஓவைசி கிண்டலடித்தார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகளின் நடத்தி வரும் போராட்டத்துக்கு சர்வதேச பிரபலங்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு சர்வதேச பாப் பாடகி ரிஹானா, காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்டோர் விவசாயிகளின் போராட்டத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இப்பம் கிரெட்டா துன்பெர்க்.. அடுத்து சான்டா கிளாஸ் மீது எப்.ஐ.ஆர்.? டெல்லி போலீஸை கிண்டலடிக்கும் ஓவைசி
சான்டா கிளாஸ்

இந்த சூழ்நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக கிரெட்டா துன்பெர்க் மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனை ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கிண்டல் அடித்துள்ளார். இது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி டிவிட்டரில்:

இப்பம் கிரெட்டா துன்பெர்க்.. அடுத்து சான்டா கிளாஸ் மீது எப்.ஐ.ஆர்.? டெல்லி போலீஸை கிண்டலடிக்கும் ஓவைசி
கிரெட்டா துன்பெர்க்

டெல்லியின தெருக்களில் இருந்து அனைத்து குற்றங்களையும் அழித்தபின், டெல்லி காவல்துறை இந்தியாவின் மிக சக்தி வாய்ந்த எதிரிக்கு எதிராக போராடுவதற்கான சவாலை எட்டியுள்ளது. கருத்துக்களை கொண்ட சுவிட்சர்லாந்து ஒரு இளம்பெண். எப்.ஐ.ஆர். பட்டியலில் அடுத்து யார்? விலங்குகளை கொடுமை படுத்தியதாக சான்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா)?. இவ்வாறு பதிவு செய்து இருந்தார்.