‘பழனிசாமி இருக்கும் வரை அவர்தான் முதல்வர்’ : அமைச்சர் கருப்பணன்

 

‘பழனிசாமி இருக்கும் வரை அவர்தான் முதல்வர்’ : அமைச்சர் கருப்பணன்

2021 சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அவர்தான் முதல்வர் என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

‘பழனிசாமி இருக்கும் வரை அவர்தான் முதல்வர்’ : அமைச்சர் கருப்பணன்

ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் வேட்பாளரை அறிவித்ததில் எந்த சிக்கலும் இல்லை என்றும் பழனிசாமி இருக்கும் வரை அவரே முதல்வராக இருப்பார் என்றும் கூறினார். அத்துடன் 16 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் நேர்மையும் திறமையும் உள்ளவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

‘பழனிசாமி இருக்கும் வரை அவர்தான் முதல்வர்’ : அமைச்சர் கருப்பணன்

2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்தார். அதேபோல் ஓபிஎஸ் கோரிக்கையான 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டது. இதனால் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளதாக அதிமுக தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர். தற்போது அமைச்சர் கருப்பணனின் கருத்து மீண்டும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.