இருசக்கர வாகனம் மீது தனியார் மில் பேருந்து மோதல் – இளைஞர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது தனியார் மில் பேருந்து மோதல் – இளைஞர் பலி!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் மில் பேருந்து மோதிய விபத்தில், ராணுவ கேண்டீன் விற்பனையாளர் உயிரிழந்தார்.

திண்டுக்கல் குள்ளனம்பட்டி அருகே உள்ள வினோபாஜி நகரை சேர்ந்தவர் சக்திராஜன்(39). இவர் திண்டுக்கல் ராணுவ கேண்டீனில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று சக்திராஜன், தனது அக்கா மகள் கோகிலா (18) என்பவரை, நத்தம் கோவில்பட்டியில் உள்ள அவரது வீட்டில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம் மீது தனியார் மில் பேருந்து மோதல் – இளைஞர் பலி!

கணவாய்பட்டி பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சக்திராஜன் வாகனத்தின் மீது, எதிரே வந்த தனியார் மில் மினி பேருந்த மீது மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட சக்திராஜன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த கோகிலாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சக்திராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.