பார்வையற்ற ஆசிரியரிடம் திருடிய ரூ.6.25 லட்சத்தை திருப்பி செலுத்திய திருடன்

 

பார்வையற்ற ஆசிரியரிடம் திருடிய ரூ.6.25 லட்சத்தை திருப்பி செலுத்திய திருடன்

அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே பார்வையற்ற ஆசிரியரிடம் திருடிய ரூ.6.25 லட்சம் பணத்தை, கொள்ளையன் மீண்டும் அவரது வங்கி கணக்கில் செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் விக்ரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர் துரைசிங் என்பவரின் செல்போனை திருடிய, மர்மநபர்கள் அவரது வங்கி

பார்வையற்ற ஆசிரியரிடம் திருடிய ரூ.6.25 லட்சத்தை திருப்பி செலுத்திய திருடன்

கணக்கில் இருந்து 6 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான ஆசிரியர் துரைசிங் விக்ரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், அந்த மர்மநபர், கொள்ளையடித்த பணம் முழுவதையும் ஆசிரியரின் வங்கி கணக்கில் திருப்பி செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.