அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை; பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம்!

 

அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை; பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம்!

அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை; பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம்!

இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலர் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தைச் செயல்படுத்துவது, தமிழில் அர்ச்சனை செய்வது, தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை; பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம்!

இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை போல பெண்களும் விருப்பப்பட்டால், தமிழக அரசின் உதவி மூலம் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும். தமிழில் அர்ச்சனை செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படும்.முக்கிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகை வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர் , செல்போன் எண் அறிவிப்பு பலகையில் இடம் பெறும்.ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையே ஜீயர்கள் தொடர்ந்து நியமிக்கப்படுவர்” என்றார்.