‘பாலியல் வழக்கில் சிக்கிய’ காதல் மன்னன் காசிக்கு எதிராக மேலும் ஒரு பெண் புகார்!

 

‘பாலியல் வழக்கில் சிக்கிய’ காதல் மன்னன் காசிக்கு எதிராக மேலும் ஒரு பெண் புகார்!

ஆபாசப்படங்கள் மூலம் பெண்களை மிரட்டி பணம் பறித்த காசி மீது, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘பாலியல் வழக்கில் சிக்கிய’ காதல் மன்னன் காசிக்கு எதிராக மேலும் ஒரு பெண் புகார்!

நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் காசி(26), சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களுடன் பழகி, ஆபாசப் படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி வந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவரால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாற்றப்பட்ட நிலையில், முதன் முதலாக சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் புகார் அளித்தார். அதன் படி, சமூக வலைதளங்களில் காதல் மன்னனாக வலம் வந்த காசி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

‘பாலியல் வழக்கில் சிக்கிய’ காதல் மன்னன் காசிக்கு எதிராக மேலும் ஒரு பெண் புகார்!

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என கன்னியாகுமரி காவல்துறை கோரிக்கை விடுததன் பேரில், காசி வழக்கு சிபிசிஐடி வசம் மாறியது. அதன் படி, காசி மற்றும் அவரது நண்பர்களிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர். அதில் காசி தனது நண்பர் தினேஷுடன் சேர்ந்து, பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்து வந்தது அம்பலமானது. காசி மீது இதுவரை 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

‘பாலியல் வழக்கில் சிக்கிய’ காதல் மன்னன் காசிக்கு எதிராக மேலும் ஒரு பெண் புகார்!

இந்த நிலையில், காசி மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். ஆபாச படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு தன்னை மிரட்டியதாகவும், பணம் பறித்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில், காசி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.