ரூ.50 லட்சம் அறிவித்துவிட்டு 25 லட்சம் வழங்குவது துரோகம்… டி.டி.வி.கண்டனம்
கொரோனா முன்களப் பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு அதை மாற்றி 25 லட்ச ரூபாயாக வழங்குவது துரோகம் என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில், “கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு இன்னுயிரை இழக்கும் முன் களப்பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த நிதி ரூ.25 லட்சமாகக் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு இன்னுயிரை இழக்கும் முன்களப்பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என @CMOTamilNadu ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த நிதி ரூ.25 லட்சமாக குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. 1/3
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 8, 2020
கொரோனா தடுப்புப்பணிகளில் ஆரம்பம் முதலே ‘சொல்வது ஒன்று ; செய்வது வேறொன்று’ என செயல்படும் தமிழக அரசின் இந்த அறிவிப்பு உயிரைப் பணயம் வைத்து பெருந்தொற்று நோய்க்கு எதிராக போராடியவர்களுக்குச் செய்யும் துரோகமாகும். 2/3 #TNFightsCorona
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 8, 2020
கொரோனா தடுப்புப்பணிகளில் ஆரம்பம் முதலே ‘சொல்வது ஒன்று ; செய்வது
வேறொன்று’ என செயல்படும் தமிழக அரசின் இந்த அறிவிப்பு உயிரைப் பணயம் வைத்து பெருந்தொற்று நோய்க்கு எதிராக போராடியவர்களுக்குச் செய்யும் துரோகமாகும். எனவே, முன்பு அறிவித்தபடியே கொரோனா தடுப்புப்பணிகளில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அளித்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.