பெரியார் சிலை அவமதிப்பு; பாஜகவை குறை சொல்லாதீங்க- அண்ணாமலை

 

பெரியார் சிலை அவமதிப்பு; பாஜகவை குறை சொல்லாதீங்க- அண்ணாமலை

பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்த விவகாரத்தில் பா.ஜ.க வை குறை சொல்ல வேண்டாம் என அக்கட்சியின் துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளர்.

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு காவி பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் சிலை அவமதிப்பு; பாஜகவை குறை சொல்லாதீங்க- அண்ணாமலை

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பெரியார் சிலைக்கு காவிதுண்டு அணிவித்ததில் பாஜகவை குறைசொல்ல வேண்டாம். இதனை அரசியல் ஆக்க கூடாது. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை கட்டுபடுத்த வேண்டும். பா.ஜ.கவின் ஒரே வேட்பாளர் மோடிதான். தமிழ்நாட்டில் தேர்தல் நேரம் என்பதால் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மூத்த தலைவர்களுக்கு வேறு வாய்ப்பு வழங்கப்படும். பள்ளி தேர்வு குறித்து இன்னும் அறிவிப்பு வரவில்லை. பா.ஜ.க வலுவாக தமிழகத்தில் காலூன்றும். வேளாண் சட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. எதிர்கட்சிகளின் போராட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு கிடைக்காது” எனக் கூறினார்.