பெண்ணின் வீட்டின் முன் ஆபாசமாக நடந்து கொண்ட சுப்பையாவுக்கு ஆதரவாக பேசும் அண்ணாமலை!

 

பெண்ணின் வீட்டின் முன் ஆபாசமாக நடந்து கொண்ட சுப்பையாவுக்கு ஆதரவாக பேசும் அண்ணாமலை!

பெண்ணின் வீட்டின் முன் ஆபாசமாக நடந்து கொண்ட ஏபிவிபி தலைவர் சுப்பையா சண்முகம் விவகாரம் என்பது குடியிருப்பில் தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையே நடந்த பிரச்சனை என பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாஜக என்றும் விவசாயிகளுக்கு ஆதரவான கட்சி, உயர்மின் கோபுர விவகாரத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின் பேரில் விளைநிலங்கள் வழியாக செல்ல அனுமதித்து இருப்பதாக தெரிவித்தது திரித்து கூறப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஒரு சில கருத்துக்களை நானும் ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் விவசாயிகளோடு வாதிட மாட்டேன் ஏனென்றால் நானும் ஒரு விவசாயி , அரசியல்வாதிகளோடு மட்டுமே வாதிடுவேன. எனக்காக அறிவித்த அந்த ஒரு கோடி ரூபாய் விவசாயிகளின் நலனுக்காக பயன்படட்டும்.

பெண்ணின் வீட்டின் முன் ஆபாசமாக நடந்து கொண்ட சுப்பையாவுக்கு ஆதரவாக பேசும் அண்ணாமலை!

இந்து பெண்ணின் வீட்டின் முன் ஆபாசமாக நடந்து கொண்ட ஏபிவிபி தலைவர் சுப்பையாவுக்கும், அவர் குடியிருப்பில் இருந்தவருக்கும் ஏற்கனவே பிரச்சினை இருந்துள்ளது. தற்போது அது சுமூகமாக முடித்துக் கொள்ளப்பட்டது . ஆனால் தொல்.திருமாவளவன் விவகாரத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு விவகாரத்தையும் ஒருசேர பார்க்க முடியாது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு அதிகளவில் இளைஞர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர்” எனக் கூறினார்.