மேகதாது அணை பிரச்சனை முடிவுக்கு வரவுள்ளது- அண்ணாமலை

 

மேகதாது அணை பிரச்சனை முடிவுக்கு வரவுள்ளது- அண்ணாமலை

மேகதாது அணைக்கு அனுமதி இல்லை என பாராளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளதற்கு தமிழக பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.

மேகதாது அணை பிரச்சனை முடிவுக்கு வரவுள்ளது- அண்ணாமலை

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் முயற்சியை கைவிடக் கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் போலீசாரின் அனுமதியை மீறி நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக நிர்வாகிகளான பொன்.ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்துக்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,“நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் கர்நாடக எம்பி மேகதாது அணை திட்ட அறிக்கை ஒப்புதல் குறித்து கேட்ட கேள்விக்கு மத்திய நீர்வள அமைச்சர் கூறும்போது தமிழ்நாடு ஒப்புதல் இல்லாமல், காவிரி நீர் மேலாண்மை ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு ஒப்புதல் கொடுக்க இயலாது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் மேகதாது அணை பிரச்சனை முற்றுக்கு வர உள்ளது. நல்லதே நடக்கும்” என தெரிவித்தார்.