சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

 

சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் அன்னாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஈஸ்வரன் கோயிலில், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதேபோன்று, மகிமாலீஸ்வரர் கோவில், கருங்கல்பாளையத்தில் உள்ள சோலிஸ்வரர் கோயில்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. மகிமாலீஸ்வரர் கோயிலில் சிவனுக்கு 150 கிலோ அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையொட்டி, சிவன்கோயில்களில் பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சிவனை வழிபட்டு சென்றனர். சிவனுக்கு செய்யப்பட்ட அன்னாபிஷேகம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு