ஜூன்.14 ஆம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு!

 

ஜூன்.14 ஆம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு!

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு ஜூன் 14முதல் ஜூலை 15 தேர்வுகளை நடத்தி முடிக்கப்பட்டு ஜூலை 30ஆம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஜூன்.14 ஆம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு!

ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்துவது குறித்து உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனும் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2017 ரெகுலேஷன்படி யூ.ஜி., பி.ஜி பட்டப்படிப்பு தேர்வுகள் வரும் ஜூன் 14ஆம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் தொடங்கும். 2013 ரெகுலேஷனில் எழுதிய யூ.ஜி மாணவர்கள் தேர்வும் ஜூன் 14ஆம் தேதி தொடங்கும். மற்ற ரெகுலேஷன் மாணவர்கள் தேர்வு ஜூன் 21ஆம் தொடங்குகிறது. ஏற்கனவே தேர்வெழுதிய மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத விரும்பினால் பணம் கட்ட தேவை இல்லை. பணம் கட்டாமல் இருந்த மாணவர்கள் இன்று முதல் 3 தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்தி தேர்வில் கலந்து கொள்ளலாம்.

அண்ணா பல்கலைக்கழகம் தவிர மற்ற பல்கலைக்கழங்களுக்கு ஜூன்15 தொடங்கி ஜூலை 15இல் தேர்வுகள் முடிக்கப்படும். முடிவுகள் ஜூலை 30ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.