பளபளக்கும் அண்ணா சுரங்கப்பாதை; புதுப்பொலிவுடன் திறப்பு!

 

பளபளக்கும் அண்ணா சுரங்கப்பாதை; புதுப்பொலிவுடன் திறப்பு!

சென்னையில் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ள அண்ணா சுரங்கப்பாதை, மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் மிகப்பெரிய சுரங்கப்பாதைகளுள் ஒன்று பழைய அண்ணா சுரங்கப்பாதை. அண்ணா சாலையில் இருக்கும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்துக்கு அருகே அமைந்திருக்கும் இந்த சுரங்கப்பாதை மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சுரங்கப்பாதை தற்போது சீரமைக்கப்பட்டு அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்துக்கு செல்லும் சுரங்கப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.

பளபளக்கும் அண்ணா சுரங்கப்பாதை; புதுப்பொலிவுடன் திறப்பு!

சென்னையின் பிரதான சாலைகளான வாலஜா சாலை, எல்லிஸ் சாலை, அண்ணா சாலை உள்ளிட்டவற்றுள் இருந்து வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை மூலம் மெட்ரோ பயணிகளும் நேரடியாக மெட்ரோ நிலையம் செல்ல முடியும். அதுமட்டுமில்லாமல், மக்கள் சாலையை கடப்பதை இந்த சுரங்கப்பாதை சுலபமாக்குவதோடு, காதிபவன் மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனைகளையும் இணைக்கிறது.

மேலும், சுரங்கப்பாதையில் இருந்து வெளியேறும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நுழைவு வாயிலிலும் நடைபாதைகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களுக்கு ஏதுவாக புதுப்பிக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கப்பாதை சென்னை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.