“நான் தனியாக இருக்குற மாதிரி இருக்கு” கன்பஷன் ரூமில் கதறும் அனிதா சம்பத்!

 

“நான் தனியாக இருக்குற மாதிரி இருக்கு” கன்பஷன் ரூமில் கதறும் அனிதா சம்பத்!

கன்பஷன் ரூமில் பிக் பாஸிடம் அனிதா சம்பத் கதறி அழுவது போல, இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

“நான் தனியாக இருக்குற மாதிரி இருக்கு” கன்பஷன் ரூமில் கதறும் அனிதா சம்பத்!

பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளர்களின் முகத்திரை கிழியத் தொடங்கியிருக்கிறது. ஒரு சிலர் இன்னும், கேமராவுக்கு பயந்து நடித்துக் கொண்டு இருந்தாலும் பலர் தான் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி வருகின்றனர். அதில் முக்கியமாக சுரேஷ் சக்கரவர்த்தி தான். இவர் நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்வி பிக் பாஸ் பார்க்கும் அனைவருக்குமே எழுந்திருக்கும். மனதை புண்படுத்தும் படியான இவரது பேச்சு, போட்டியாளர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது.

“நான் தனியாக இருக்குற மாதிரி இருக்கு” கன்பஷன் ரூமில் கதறும் அனிதா சம்பத்!

ஆயுத பூஜை நிகழ்ச்சியை நேற்று அனிதா சம்பத் தொகுத்து வழங்கிய போது, விதவை பெண்கள் மீதான சடங்குகளை உடைத்தெறிய வேண்டும் என கூறினார். அப்போது சுரேஷ் சக்கரவர்த்தி குறுக்கிடவே, இவரை போல பலரும் நினைக்கின்றனர் என அவரை மேற்கோள் காட்டி பேசி விட்டார் அனிதா சம்பத்.

“நான் தனியாக இருக்குற மாதிரி இருக்கு” கன்பஷன் ரூமில் கதறும் அனிதா சம்பத்!

இதனால் கடுப்பான சுரேஷ் அனிதாவை கடுமையாக விமர்சித்தார். இருப்பினும் அனிதா கூறியது தவறு இல்லை என ரியோ, ரம்யா, பாலா, ஷிவானி, ஆரி உள்ளிட்டோர் அனிதாவை தேற்றினர்.

“நான் தனியாக இருக்குற மாதிரி இருக்கு” கன்பஷன் ரூமில் கதறும் அனிதா சம்பத்!

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோவில், ‘ நான் ரொம்ப தனியா இருக்குற மாதிரி இருக்கு. நாம் இப்படி எல்லாம் இருந்ததே இல்லை. பிடிச்சவங்க சொல்லுறத கேக்குறதா? இல்ல மனசு சொல்லுறத கேக்குறதா? என போராட்டம் எனக்குள் இருக்கு. ஒரு நெகட்டிவ் ஃபீல் இருக்கு’ என கூறி கதறி அழுவது போல புரோமோ வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் அடுத்தது என்ன சண்டை நடக்க போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்..