அனிதா vs ஆரி – TRP டேலண்ட் யார் எனக் கடும்போட்டி! பிக்பாஸ்4

 

அனிதா vs ஆரி – TRP டேலண்ட் யார் எனக் கடும்போட்டி! பிக்பாஸ்4

நாமினேஷன் சம்பிரதாயம் நடக்கும் திங்கட்கிழமை எப்பிசோட். ஆனால், ஆட்கள் குறைய குறைய யார் யாரை நாமினேஷன் செய்வார்கள் என்று ஆடியன்ஸ்க்கு மட்டுமல்ல, பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கும் தெரிந்திருக்கும். அதனால், யார் யார் நாமினேஷனில் இருப்பார்கள் என்பது மட்டுமல்ல, யார் வெளியேறுவார் என்பதைக்கூட சில சமயம் சரியாக யூகித்திட முடியும். கடந்த மூன்று சீசனில் தொடக்க நாளில் உள்ளே வந்தவர்களில் ஒருவர் மட்டுமே டைட்டிலை வென்றிருக்கிறார்கள். இந்த சீசனில் அர்ச்சனா டஃப் கொடுத்ததால் அது மாறும் என நினைத்தவர்களுக்கு அர்ச்சனாவின் எவிக்‌ஷன் ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கும்.

பிக்பாஸ்

பில்லாவின் ‘வெத்தலையை போட்டேண்டி’ என்ற பாடலை ஒலிக்க விட, எங்களுக்கு தெரிந்த இரண்டு மூணு ஸ்டெப்ஸை இன்னும் எத்தனை தடவைத்தான் ஆடறதுன்னு அலுத்துக்கொண்டே ஆடினார்கள் போட்டியாளர்கள்.

ரியோ அண்ட் கோ அர்ச்சனாவுக்கு குட் மார்னிங் சொன்னார்கள். ஆஜித்தோடு விளையாடிக்கொண்டிருந்த ஷிவானி கத்தியது அனிதாவுக்கு டிஸ்டர்ப்பாக இருந்ததாகப் புகார் தர, கேப்டன் அதை ஷிவானியிடம் சொல்ல, சின்ன உரசல் ஏற்பட்டது.

அனிதா vs ஆரி – TRP டேலண்ட் யார் எனக் கடும்போட்டி! பிக்பாஸ்4

நாமினேஷனில் அழகாக குருப்பிஸம் வெளிப்பட்டது. ரியோ அண்ட் குருப்பை அட்டாக் செய்தால் தம் குருப்பிஸம் தெரிந்துவிடும் என்பதால் ஒர்ய் ஓட்டை மாத்திக் குத்தினார்கள்.

இறுதியாக நாமினேஷன் பட்டியல் அனிதா, ஆரி, ஷிவானி, கேபி, ஆஜித் என்பதாக முடிந்தது. ரியோ பெயரைச் சொல்லாதது ஆச்சர்யம்தான். அவரே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்.

பாத்திரம் கழுவும் டீமில் இருந்த ஷிவானி, உதவி செய்வதற்காக கிச்சன் டீம்க்கு வந்திருந்தார். அவரிடம் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் பயன்படுத்த வேண்டும் என கேப்டன் பாலா விரிவாக விளக்க, ஷிவானி சட்டென்று கோபப்பட்டார். “நானே ஹெல்ப்க்கு வந்திருக்கேன். எங்கிட்ட ஏன் இப்படி சொல்ற?” என்றார்.

அனிதா vs ஆரி – TRP டேலண்ட் யார் எனக் கடும்போட்டி! பிக்பாஸ்4

வழக்கமாக, கமல் வரும் நாளைக்கு அடுத்த நாளில் எல்லோரும் கண்டண்ட் கொடுக்க வேறு வேறு வகைகளில் முயற்சி செய்வார்கள். அதாவது தனித்தன்மையோடு இருப்பதாகக் காட்டிக்கொள்வார்கள். அதுதான் ஷிவானியும் செய்தது. அது பாலா என்றதும், ஓவராக வெளிப்பட்டது.  

கிச்சன் சண்டையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர பாலா ஒரு மீட்டிங் போட்டார். ‘எனக்கு டீ, காபி போடத் தெரியாது… அதனால பால் கவுண்டிங் வெச்சிக்க மாட்டேன்’ என அனிதா சொன்னதைக் கேட்டு பாலா ஷாக் ஆனார். இவரையா கிச்சன் டீம்க்கு கேப்டனாகப் போட்டோம் என நினைத்திருப்பார். இதையே மீட்டிங் முடிந்து பேசும்போது ‘கிச்சன் கேப்டன் மாத்தணும்னு நினைச்சேன்”என்று சொல்லிட்டு இருந்தார்.

அனிதா vs ஆரி – TRP டேலண்ட் யார் எனக் கடும்போட்டி! பிக்பாஸ்4

’மாட்டிகிட்டியா’ டாஸ்க் தொடங்கியது. ஒருவர் கையை நீட்டிருக்க, அதைத் தொட்டதும் கேள்வி கேட்கணும். காரசாரமாகப் போனது இந்த டாஸ்க். ஆரியின் டார்கெட்டாக அனிதாவைக் குறி வைத்தார்.

“ஆரியை நரி என்று சொன்னதற்காக என்னை குறித்து தாக்குகிறார்” என்று அனிதாவின் குற்றச்சாட்டுக்கு “நீங்கதான் TRP டேலன்ட்” எனச் சொல்ல, “நான் இல்ல நீங்கதான் TRP டேலண்ட்” என மறு புகார் வாசித்தார். இப்படியே பேசிட்டே இருந்தா எப்படி அடிச்சு காட்டுங்க என பிக்கி மனதிற்குள் சொல்லி மகிழ்ந்திருப்பார். அதுவும் நடந்தது,

அனிதா vs ஆரி – TRP டேலண்ட் யார் எனக் கடும்போட்டி! பிக்பாஸ்4

ஒரு கேள்விக்கு அனிதாவைப் பற்றி சொல்ல வந்தவர், அனிதாவின் கணவர் பெயரைச் சொன்னதும் எரிமலை எப்படிப் பொறுக்கும் என்பதுபோல பொங்கி விட்டார். கையை நீட்டி கடுமையாக எச்சரித்தார். மற்ற போட்டியாளர்கள் சமாதானம் செய்ததும்தான் ஆரி அந்த டாபிக்கை விட்டார்.

அது முடிந்தும், அனிதா ஆரியைப் பற்றியும், ஆரி அனிதாவைப் பற்றியும் மற்ற போட்டியாளர்களிடம் குறை சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இருவருக்கும் இது டிவி ஷோ தன்னை எப்படி வெளிபடுத்தினால் வெளியே தெரிவோம் என்பது நன்கு தெரிந்திருக்கிறது.

அனிதா vs ஆரி – TRP டேலண்ட் யார் எனக் கடும்போட்டி! பிக்பாஸ்4

அனிதாவின் பிரச்சனையை வைத்து கமல் எப்பிசோட்டில் நீண்ட பஞ்சாயத்து இருக்கும் என்று இப்போதே சொல்லிவிடலாம். அனிதாவைப் பற்றி ஆரி துல்லியமாக மதிப்பிட்டு வைத்திருந்தார். எதிராளி சரியான வாதத்தை எடுத்து வைத்தால், அவரிடம் அனிதா வம்புக்குச் செல்ல மாட்டார் என்றார். ரியோவின் சண்டையில் அதுதான் நடந்தது. அதேபோல அனிதா கணித்ததைப் போலவே ஆரி, கேமராவிடம் மன்னிப்பு கேட்டார். அதுவும் இரவு 2.30 மணிக்கு. ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை போல.

அனிதா vs சுரேஷ்., அடுத்து அனிதா vs ரியோ, தற்போது அனிதா vs ஆரி என்று மாறியிருக்கிறது. இது எந்தளவு போகும் என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.