கணவனை கட்டிவைத்து அவரது கண் முன்னே மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

 

கணவனை கட்டிவைத்து அவரது கண் முன்னே மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

ஆந்திராவில் பழங்குடியின பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஜிம்மிநகர் என்ற பகுதியில் வசித்துவருகின்றனர். தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வரும் இந்த தம்பதியினர், வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது 2 பைக்களில் வந்த 4 பேர் பணியிலிருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனை தடுக்க முயன்ற கணவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கணவனைக் கட்டி வைத்து அவரது கண் முன்னே மனைவியைக் கத்தி முனையில் அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது கொடுமையின் உச்சக்கட்டம்.

கணவனை கட்டிவைத்து அவரது கண் முன்னே மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட அந்த தம்பதியினர், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வேலுகோடு காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளனர். ஆனால் காவலர்கள் புகாரை வாங்காமல், பாலியல் வன்கொடுமை செய்த கும்பலுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்டத்திற்கு வந்த துணை எஸ்பி, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார். மேலும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.