தன்னைவிட தங்கை மீது பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் அக்கா செய்த காரியம்! பரிதாபமாக உயிரிழந்த 11 மாத குழந்தை

 

தன்னைவிட தங்கை மீது பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் அக்கா செய்த காரியம்! பரிதாபமாக உயிரிழந்த 11 மாத குழந்தை

தன்னைவிட தங்கை மீது பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் அக்கா செய்த காரியம்! பரிதாபமாக உயிரிழந்த 11 மாத குழந்தை

தங்கை மீது தன்னுடைய பெற்றோர் அதிக பாசத்துடன் இருப்பதை பார்த்த அக்கா நிர்மலாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு தங்கையை தண்ணீர் தொட்டியில் தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தன்னைவிட தங்கை மீது பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் அக்கா செய்த காரியம்! பரிதாபமாக உயிரிழந்த 11 மாத குழந்தை

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷாசனம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா. அவருக்கு ஐந்து வயது நிர்மலா, 11 மாத வயது ஹேமஸ்ரீ ஆகிய மகள்கள் உள்ளனர். ஹேமஸ்ரீ பிறந்தது முதல் இரண்டாவது மகள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டில் படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தை ஹேமஸ்ரீ திடீரென்று காணவில்லை. ஹேமஸ்ரீயை பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்த பெற்றோர் அவளை வீட்டின் மேல்மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்டனர்.

இதுபற்றி போலீசாருக்கு தகவல் அழிக்கப்பட்ட நிலையில் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.
இறுதியில் ஹேமஸ்ரீயின் அக்கா நிர்மலா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவளிடம் விசாரணை நடத்தினர்.

தன்னைவிட தங்கை மீது பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் அக்கா செய்த காரியம்! பரிதாபமாக உயிரிழந்த 11 மாத குழந்தை


அப்போது தங்கை பிறந்தது முதல் அவள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்தனர். அதனால், தங்கையை தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டேன் என்று அக்கா நிர்மலா அப்பாவியாக கூறினாள்.
நிர்மலா கூறியதை கேட்டு பெற்றோர் மட்டுமே அல்லாமல் போலீசாரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நிர்மலா மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முடிவில் உள்ளனர்.