6 நாட்களாக யாருக்கும் கொரோனா இல்லை… பாதிப்பற்ற இந்தியாவின் முதல் யூனியன் பிரதேசம்!

 

6 நாட்களாக யாருக்கும் கொரோனா இல்லை… பாதிப்பற்ற இந்தியாவின் முதல் யூனியன் பிரதேசம்!

கடந்த ஆறு நாள்களாக அந்தமான் யூனியன் பிரதேசத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படாததால், இந்தியாவில் கொரோனா பாதிப்பில்லாத முதல் யூனியன் பிரதேசமாக மாறியுள்ளது.

6 நாட்களாக யாருக்கும் கொரோனா இல்லை… பாதிப்பற்ற இந்தியாவின் முதல் யூனியன் பிரதேசம்!

கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் சிக்கி சின்னாபின்னாமாகியது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டுவருகிறது. குறிப்பாக, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வருகையால் மக்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது.

6 நாட்களாக யாருக்கும் கொரோனா இல்லை… பாதிப்பற்ற இந்தியாவின் முதல் யூனியன் பிரதேசம்!

அந்த வகையில், யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமானில் கடந்த ஆறு நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட கடும் நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பில்லாத முதல் யூனியன் பிரதேசமாக அந்தமான் மாறியுள்ளது.