ராமதாஸ் உடன் கண்ணீர் மல்க பேசிய அன்புமணி!

 

ராமதாஸ் உடன் கண்ணீர் மல்க பேசிய அன்புமணி!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.

ராமதாஸ் உடன் கண்ணீர் மல்க பேசிய அன்புமணி!

இந்த நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ராமதாஸ் உடன் கண்ணீர் மல்க பேசிய அன்புமணி!

இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைந்து, தனது தந்தை இராமதாசுடன் போனில் தொடர்புக் கொண்டு கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். மேலும் தனது மனைவிக்கு மகிழ்ச்சியுடன் கேக் ஊட்டும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.