”சிட்டி குழுமத்தின் நுகர்வோர் வங்கி பிரிவு தலைவராக மதுரையை சேர்ந்த ஆனந்த் செல்வகேசரி நியமனம்” !
Nov 8, 2020, 11:31 IST1604815287000
அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக குழுமங்களில் ஒன்றாக அறியப்படும் சிட்டிக்குழுமத்தின் நுகர்வோர் வங்கி பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக மதுரையை சேர்ந்த ஆனந்த் செல்வகேசரி என்ற தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் மட்டுமின்றி உலக அரங்கில் தமிழர்களின் கை ஏற்கனவே பலமுறை ஓங்கி ஒலித்துள்ளது. உலக அரங்கில் சாதித்து காட்டிய பல தமிழர்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். சென்னையில் பிறந்து பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்த இந்திரா நூயி முதல்
சென்னையில் பிறந்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்து காட்டிய சுந்தர் பிச்சை வரை பலரை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த வரிசையில், உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை தமிழர்களின் கை இன்று ஓங்கி உள்ளதை நிரூபிக்கும் விதமாக சில வரலாற்று சம்பவங்கள் இன்று நடைபெற்றுள்ளன.
முத்துக்குமார்