ஆனைக்கட்டி பழங்குடி மாணவர்கள் மேல்நிலைப்பள்ளி – புதிய பாடப் பிரிவுகள் தொடங்க கோரிக்கை!

 

ஆனைக்கட்டி பழங்குடி மாணவர்கள் மேல்நிலைப்பள்ளி – புதிய பாடப் பிரிவுகள் தொடங்க கோரிக்கை!

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய பாடப்பிரிவுகளை சேர்க்க வேண்டும் என முன்னாள் மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனைக்கட்டி பழங்குடி மாணவர்கள் மேல்நிலைப்பள்ளி – புதிய பாடப் பிரிவுகள் தொடங்க கோரிக்கை!

கோவை மாவட்டத்தில் தமிழக – கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது ஆனைக்கட்டி மலைக்கிராமம். இங்கு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர் நிலைப் பள்ளியில் 213 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சுற்றுவட்டாரத்தில் உள்ள பழங்குடி மாணவர்களுக்கும், கேரளாவில் உள்ள தமிழ் மாணவர்களும் கல்வி கற்கவும் இந்த பள்ளி பெருந்துணையாக இருந்து வருகிறது.

அதேசமயம் மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படாததால் பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து, சின்னத்தடாகம் பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானதுடன், மாணவிகளின் இடைநிற்றல்களும் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக அந்த பள்ளியை மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என ஆனைக்கட்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வைத்தனர்.

ஆனைக்கட்டி பழங்குடி மாணவர்கள் மேல்நிலைப்பள்ளி – புதிய பாடப் பிரிவுகள் தொடங்க கோரிக்கை!

இந்த நிலையில், அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுதல், ஆசிரியர்கள் நியமித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஒரு கோடியே 79 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னாள் மாணவர்களும் சமூக ஆர்வலர்களும், இந்த பள்ளியில் புதிய பாடத் திட்டங்களை தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இங்கு பத்தாம் வகுப்பு படித்த , ஆனைகட்டியை ஒட்டியிருக்கும் கேரளாவில் வசிக்கும் மாணவியான மெரீனா ஜென்சி கூறுகையில், ஆனைகட்டி பள்ளியில் மேல்நிலை வகுப்புகள் இல்லாததால் தற்போது தேனியில் பாட்டி வீட்டில் இருந்து +1 வகுப்பு படித்து வருவதாகவும், ஆனைகட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தாண்டே +1 வகுப்பு சேர்க்கையை தொடங்கி இருந்தால் தன்னை போன்ற மலைவாழ் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஆனைக்கட்டி பழங்குடி மாணவர்கள் மேல்நிலைப்பள்ளி – புதிய பாடப் பிரிவுகள் தொடங்க கோரிக்கை!

11 ம் வகுப்புகளில் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும், கலை மற்றும் தொழில் பாடப்பிரிவுகளும் துவங்க வேண்டுமென அரசிற்கு அப்பகுதி பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.