ஆம்புலன்ஸில் திடீர் தீ விபத்து…கோவை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!

 

ஆம்புலன்ஸில் திடீர் தீ விபத்து…கோவை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நின்றிருந்த ஆம்புலன்ஸில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸில் திடீர் தீ விபத்து…கோவை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் பரபரப்பாக இருந்தது. அப்போது திடீரென மருத்துவமனை வளாகத்தில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் இந்த தீ விபத்தின் போது நோயாளிகள் யாரும் ஆம்புலன்சில் இல்லாததாலும் , ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆம்புலன்ஸுக்கு வெளியே நின்று கொண்டிருந்தாலும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

ஆம்புலன்ஸில் திடீர் தீ விபத்து…கோவை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி!

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகவே ஆம்புலன்சில் சில பழுதுகள் உள்ளதாகவும், அதை சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது