காத்திருந்து காத்திருந்து கருணை மழை பெய்தது! இன்று வருகிறார் கமல்!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றை எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றை எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 16 பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த 2 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அதனால் கண்டிப்பாக இந்த முறையும் அரசியல் கலந்த உரையாடலே இருக்கும் என்று எதிர்ப்பக்கப்டுகிறது.
வர இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களிடம் உரையாடுவார். இந்த நிலையில் அதற்கான புரமோ வெளியாகியுள்ளது. அதில், ‘காத்திருந்து காத்திருந்து கருணை மழை பொழிந்தது’ என்றார்.
அதைத்தொடர்ந்து, ‘அன்பை உள்ளங்களின் உண்மை முகங்கள் உணர்வுகளின் உரிமையோ முகர்ந்துகொள்ளும் ஒரு புதிய குடும்பம் பிறந்திருக்கிறது. என்றும் தனக்கே உரிய பாணியில் குடும்ப தலைவனாக உங்கள் நான்’ என்று கூறுகிறார்.
மேலும் இந்த வாரம் எலிமினேஷன் இல்லாத காரணத்தினால் கமல் குறும்படம் போடுவாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.