×

தமிழிசையால் தூத்துக்குடியில் போட்டியிட இருந்த இயக்குனர் கௌதமன் திடீர் வாபஸ்

மக்களவைத் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த இயக்குனர் கௌதமன் திடீரென வாபஸ் பெற்றுள்ளார். மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த இயக்குனர் கௌதமன் திடீரென வாபஸ் பெற்றுள்ளார். தமிழ் பேரரசு கட்சி சமீபத்தில் புதிதாக தமிழ் பேரரசு கட்சி என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார் இயக்குநர் கவுதமன். இக்கட்சியின் சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக, பாஜக, அமமுக, மக்கள்
 

மக்களவைத் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்காக  வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த இயக்குனர் கௌதமன் திடீரென வாபஸ் பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்காக  வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த இயக்குனர் கௌதமன் திடீரென வாபஸ் பெற்றுள்ளார்.

தமிழ் பேரரசு கட்சி

சமீபத்தில்  புதிதாக தமிழ் பேரரசு கட்சி என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார் இயக்குநர் கவுதமன். இக்கட்சியின் சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக, பாஜக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன.

தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜனும் திமுக சார்பில் கனிமொழியும் போட்டியிடுகின்றனர். இதனால் இந்த தேர்தல் தூத்துக்குடி முக்கியத் தொகுதியாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில் திடீரென தான் தாக்கல் செய்த வேட்புமனுவை இயக்குநர் கவுதமன் வாபஸ் பெற்றுள்ளார். 

ஜனநாயக படுகொலை

இதுகுறித்து அவர் கூறுகையில் ஏப்ரல் 18-இல் தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது தேர்தல் அல்ல. ஜனநாயக படுகொலை. அரசு பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார் தமிழிசை. ஆனால், இதை மறைத்து தமிழிசை தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் பெற்றுள்ளனர். எனவே அதைக் கண்டித்து  எனது வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன் என்றார் கவுதமன்.

இதையும் படிங்க 

‘அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதீங்க’ : ராமதாஸின் உச்சகட்ட காமெடி; பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு போல…?!