×

ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள்: அ.தி.மு.க – பா.ம.க கூட்டணியை வச்சு செஞ்ச ஸ்டாலின்: கடுப்பான எடப்பாடி

ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள் எனப் பட்டம் கொடுத்த அன்புமணி அவர்களுடன் சேர்ந்து ஓட்டு கேட்டு வருவது பார்ப்பதற்குக் கேலிக்கூத்தாக உள்ளது என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அரூர்: ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள் எனப் பட்டம் கொடுத்த அன்புமணி அவர்களுடன் சேர்ந்து ஓட்டு கேட்டு வருவது பார்ப்பதற்குக் கேலிக்கூத்தாக உள்ளது என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அனல் பறக்கும் பிரச்சாரம்: மக்களவை தேர்தலில் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துத் தொடர்
 

ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள் எனப் பட்டம் கொடுத்த அன்புமணி  அவர்களுடன் சேர்ந்து ஓட்டு கேட்டு வருவது பார்ப்பதற்குக் கேலிக்கூத்தாக உள்ளது  என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

அரூர்: ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள் எனப் பட்டம் கொடுத்த அன்புமணி  அவர்களுடன் சேர்ந்து ஓட்டு கேட்டு வருவது பார்ப்பதற்குக் கேலிக்கூத்தாக உள்ளது  என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

அனல் பறக்கும் பிரச்சாரம்:

மக்களவை தேர்தலில் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துத் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மணி, தருமபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் செந்தில்குமார், அரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக அரூரில் அவர் பிரச்சாரம் செய்தார். 

 அதிமுகவை  அடகு வைத்த எடப்பாடி 

அப்போது அங்கு நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘மோடி-அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி வணங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்து விட்டார். அதிமுகவை அமித்ஷாவிடம் அடகு வைத்து  விட்டார்’ என்றார்.

 ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள் 

அதிமுக – பாமக கூட்டணி குறித்து பேசிய முக ஸ்டாலின், ‘பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள அந்த கட்சியை சேர்ந்தவர்களே ஏற்க மனமில்லாமல் இருக்கின்றனர். அதிமுக அரசை பற்றி கடுமையாக விமர்சித்துப் பேசிய ராமதாஸ், அவர்களை தற்போது புகழ்ந்து வருவது வேடிக்கையாக உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது ராமதாஸ் மணியடிக்கிறார்.  ஈபிஎஸ்-ஓபிஎஸ் டயர் நக்கிகள் என பட்டம் கொடுத்த அன்புமணி  டயர்நக்கிகளுடன் இப்போது அன்புமணி ஓட்டு கேட்டு வருவது பார்ப்பதற்குக் கேலிக்கூத்தாக உள்ளது’ என்று கடுமையாக விமர்சித்தார். 

எடப்பாடி குற்றச்சாட்டு

முன்னதாக திருப்பத்தூரில் பிரச்சாரம் செய்த  எடப்பாடி பழனிச்சாமி, பிரியாணி, தேங்காய், பஜ்ஜி, புரோட்டா கடைகளில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டினார்.