×

மனைவியை கட்டி போட்டு உயிருடன் எரித்த கணவன்: புதுச்சேரியில் பரபரப்பு!

மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி : மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணவன்- மனைவி தகராறு புதுச்சேரி கொம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயநாதன். இவருக்கு வனஜா என்ற மனைவியும், பன்னீர்செல்வநாதன் என்ற மகனும் இருந்தனர். கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனஜா சண்டை போட்டு கொண்டு அவரது தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். இதே
 

மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

புதுச்சேரி : மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கணவன்- மனைவி  தகராறு

புதுச்சேரி கொம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயநாதன். இவருக்கு வனஜா என்ற மனைவியும், பன்னீர்செல்வநாதன் என்ற மகனும் இருந்தனர். கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனஜா சண்டை போட்டு கொண்டு அவரது தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். இதே போல் சில தினங்களுக்கு முன் வனஜா சண்டை போட்டு  கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். 

மனைவியை அடித்து உதைத்த  கணவர் 

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயநாதன், வனஜாவின் வீட்டிற்குச் சென்று  சமாதானம் பேசி வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால்  மீண்டும்  கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயநாதன், வனஜாவை தாக்கியதாக தெரிகிறது. இதனால் கணவரிடம் இருந்து தப்பிக்க, வனஜா மாடிக்கு செல்லும் இரும்பு ஏணிப்படிக்கட்டில் எறியுள்ளார். ஆனால்  அவரை எற விடாமல் தொடர்நது தாக்கிய ஜெயநாதன், ஏணிப்படிக்கட்டில் சங்கிலியால் வனஜாவை கட்டி போட்டுள்ளார். 

உயிருடன் எரித்து கொலை 

இதன் பின்னர் இருசக்கர வாகனத்துக்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வந்து வனஜாவின் மீது ஊற்றி தீவைத்துக் கொளுத்தியுள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து வனஜா எழுந்து ஓட முடியாமல் சம்பா இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். 

ஜெயநாதன் கைது  

இது குறித்து தகவல் அறிந்த முதலியார்பேட்டை போலீசார் வனஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஜெயநாதனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.