×

தாயுடன் தகாத உறவு: மருத்துவமனையில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

அரசு மருத்துவமனையில் வாலிபரரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை: அரசு மருத்துவமனையில் வாலிபரரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதல் சிவகங்கையைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்.அதே பகுதிதியிலுள்ள அருண்குமார் என்பவரின் தாயாருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதையறிந்த அருண்குமார் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ரத்தம் சொட்டிய கத்தியுடன் அமர்ந்திருந்த அருண்குமார் இதை தொடர்ந்து அருண்குமாரின் தாய் மாயமாக, அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், தனது
 

அரசு மருத்துவமனையில் வாலிபரரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை: அரசு மருத்துவமனையில் வாலிபரரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்காதல் 

 

சிவகங்கையைச்  சேர்ந்தவர்  தமிழ்செல்வன்.அதே பகுதிதியிலுள்ள அருண்குமார் என்பவரின் தாயாருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதையறிந்த அருண்குமார் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். 

ரத்தம் சொட்டிய கத்தியுடன் அமர்ந்திருந்த அருண்குமார்

 

இதை தொடர்ந்து அருண்குமாரின் தாய் மாயமாக, அவரை  எங்கு தேடியும் கிடைக்காததால், தனது தாய் குறித்து விசாரிக்க தமிழ்செல்வனை  பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து, தமிழ்ச்செல்வன் அரசு மருத்துவமனைக்கு சென்றதை அறிந்து கொண்டு அங்கு சென்ற அருண், தமிழ்செல்வனிடம் தாயார் குறித்து விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால், மருத்துவமனையிலேயே தமிழ்செல்வனை சரமாரியாகக் குத்தியுள்ளார்.  இதனால் நிலைகுலைந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதையடுத்து ரத்தம் சொட்டிய கத்தியுடன் மருத்துவமனையிலேயே அருண்குமார் அமர்ந்திருந்தார். 

பட்டப்பகலில்  நடந்த கொடூரம் 

 

இந்த விவகாரம் குறித்து  போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் மருத்துவமனையிலேயே நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை உண்டாகியுள்ளது.

 

இதையும் வாசிக்க: எம்.ஜி.ஆர் பற்றி அவதூறு பேச்சு: பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!