×

கள்ளக்காதலன் உதவியோடு கள்ளக்காதலனை கொலை செய்த கொடூரம்

ராஜரத்னம் உடலை அலங்காநல்லூர் சாலையில் வீசியிருக்கிறது இந்த கும்பல், இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த உண்மை எல்லாம் தெரிய வந்திருக்கிறது. உறவு சார்ந்த பிரச்சனைகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. திருமணம் முடிந்த ஆணும் பெண்ணும் வேறு நபருடன் தொடர்பு கொள்வது, அந்த தொடர்புக்கு தடையாய் இருக்கும் நபரை கொலை செய்வது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. திருவண்ணாமலையை சேர்ந்த ராஜரத்னம், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை பிரிந்து மதுரை திருமால்புரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.
 

ராஜரத்னம் உடலை அலங்காநல்லூர் சாலையில் வீசியிருக்கிறது இந்த கும்பல், இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த உண்மை எல்லாம் தெரிய வந்திருக்கிறது.

உறவு சார்ந்த பிரச்சனைகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. திருமணம் முடிந்த ஆணும் பெண்ணும் வேறு நபருடன் தொடர்பு கொள்வது, அந்த தொடர்புக்கு தடையாய் இருக்கும் நபரை கொலை செய்வது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 

திருவண்ணாமலையை சேர்ந்த ராஜரத்னம், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை பிரிந்து மதுரை திருமால்புரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கும் வீரபாண்டி பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி அம்பிகாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராஜரத்னம் உடன் பழகி வந்த அம்பிகா, அஜித்குமார் என்ற தனது உறவுப் பையனுடனும் பழகியிருக்கிறார். இதனை அறிந்த ராஜரத்னம், அம்பிகாவை கண்டித்துள்ளார். அம்பிகா இந்த பிரச்சனையை அஜித் காதுக்கு கொண்டு போயிருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து ராஜரத்னத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி ராஜரத்னத்தை வீரபாண்டிக்கு அழைத்திருக்கிறார் அம்பிகா, அங்கிருந்த அஜித் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து ராஜரத்னத்தை வெட்டி கொலை செய்துள்ளனர். ராஜரத்னம் உடலை அலங்காநல்லூர் சாலையில் வீசியிருக்கிறது இந்த கும்பல், இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த உண்மை எல்லாம் தெரிய வந்திருக்கிறது. தற்போது அம்பிகா, அஜித்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இதையும் வாசிங்க: பணக்காரன் போல் நடித்து மாணவியை காதல் வலையில் சிக்க வைத்த கட்டிடத் தொழிலாளி: சிக்கியது எப்படி?