×

கணவனை கொன்ற நபரை திட்டமிட்டு கொன்ற மனைவி: பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

கணவரின் கொலைக்குக் காரணமானவரை கூலிப்படையை வைத்து பெண் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை: கணவரின் கொலைக்குக் காரணமானவரை கூலிப்படையை வைத்து பெண் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாம்பலத்தைச் சேர்ந்தவர் கந்தன். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். கந்தனுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கும் முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கந்தன் கடந்த ஆண்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கணவரது கொலைக்கு யார் காரணம் என்று எண்ணிய அவரது
 

கணவரின் கொலைக்குக் காரணமானவரை கூலிப்படையை வைத்து  பெண் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: கணவரின் கொலைக்குக் காரணமானவரை கூலிப்படையை வைத்து  பெண் ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாம்பலத்தைச் சேர்ந்தவர் கந்தன். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். கந்தனுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கும் முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் கந்தன் கடந்த ஆண்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கணவரது கொலைக்கு யார் காரணம்  என்று எண்ணிய அவரது மனைவி புவனேஸ்வரிக்கு பாஸ்கரன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாஸ்கரனை கொல்ல  திட்டம் தீட்டியுள்ளார் புவனேஸ்வரி. இதற்காக அவர் சிலரது உதவியை நாடியதாகத் தெரிகிறது. 

அதன்படி புவனேஸ்வரியின் திட்டத்தின் படி, கும்பல் ஒன்று பாஸ்கரனைக் கடந்த 24ஆம் தேதி பின்தொடர்ந்துள்ளது. பாஸ்கரன் அருகில் உள்ள, டாஸ்மாக் கடைக்குள் செல்ல, அங்கு வைத்து பாஸ்கரனை சரமாரியாக வெட்டிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இந்த தாக்குதலில் பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். 

 

இவ்விவகாரத்தில் எழும்பூர் நீதிமன்றத்தில் 5 பேர் சரண் அடைந்தனர். பின்னர் போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலைக்கு காரணமாவர் புவனேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. பின்னர் குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், புவனேஸ்வரியை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர் விசாரணை செய்து வருகின்றனர். 

முன்னதாக மகனை கொன்று விட்டு ஜாமீனில் வந்த கள்ளக்காதலனை மஞ்சுளா என்ற பெண் திருவண்ணாமலையில், கூலி படையை வைத்து வெட்டி கொன்றது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: ‘அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதீங்க’ : ராமதாஸின் உச்சகட்ட காமெடி; பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு போல…?!