×

இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்: மிரட்டலுக்கு பயந்து தாயின் நிர்வாண படத்தையும் அனுப்பிய கொடூரம்!

இளம்பெண் ஒருவரை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர், அதுதொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் விட்டுவிடுவேன் என மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்: இளம்பெண் ஒருவரை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர், அதுதொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் விட்டுவிடுவேன் என மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை : திருவள்ளூர், பத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். எம்பிஏ பட்டதாரியான ஜெயபிரகாஷும் அவரது கல்லூரி தோழியும் காதலித்து வந்துள்ளனர். அப்போது
 

இளம்பெண் ஒருவரை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர், அதுதொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் விட்டுவிடுவேன் என மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்: இளம்பெண் ஒருவரை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர், அதுதொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் விட்டுவிடுவேன் என மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை :

திருவள்ளூர், பத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்.  எம்பிஏ பட்டதாரியான ஜெயபிரகாஷும் அவரது கல்லூரி தோழியும் காதலித்து வந்துள்ளனர். அப்போது திருமண ஆசை காட்டி அப்பெண்ணை  ஜெயபிரகாஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதுதொடர்பான ஆபாச படங்களையும் ஜெயபிரகாஷ் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதற்கிடையில், கருத்து வேறுபாடு காரணமாக அப்பெண் ஜெயபிரகாஷை விட்டு விலகி சென்றுள்ளார்.  மேலும், அவர் வேலை செய்யும் இடத்தில், வேறு ஒருவரை காதலிப்பதாகக் கூறப்படுகிறது. 

மிரட்டல் விடுத்த காதலன்:

இதனையடுத்து அப்பெண்ணை அணுகிய ஜெயபிரகாஷ், தன்னை திருமணம் செய்துகொள்ள, வற்புறுத்தியுள்ளார். ஆனால்  அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே,  ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ், நாம் காதலித்தபோது இருவரும் ஒன்றாக எடுத்த படங்களை உனது பெற்றோர், உறவினரிடம் காட்டுவேன் என்றும் மேலும், அப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார். அவனது தொடர் மிரட்டல்களுக்கு பயந்து, தனது தாயாரின் நிர்வாணப் படத்தையும் இ-மெயிலில் அப்பெண்  அனுப்பி வைத்த கொடூரமும் அரங்கேறியுள்ளது. 

பாதிக்கப்பட்ட பெண் புகார்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் ஜெயபிரகாஷை கைது செய்த போலீசார், அவர்  மீது 376 சட்டவிதிகளின் படி மிரட்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய வழக்குகளைப் பதிவு செய்து,  பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அதிருப்தி:

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளம்பெண் ஒருவரை ஆபாசப் படம் பிடித்து, அதனை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.