×

200 பெண்களின் ஆபாச வீடியோ எடுத்த இளைஞர் தலைமறைவு: 99 பெண்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக போலீஸுக்கு மிரட்டல்!

முகநூல் மூலம் பழகி, ஆபாச வீடியோ எடுத்து நகை பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டுவரும் இளைஞர் போலீஸுக்கு சவால் விடுவது போல ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது கோவை : முகநூல் மூலம் பழகி, ஆபாச வீடியோ எடுத்து நகை பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டுவரும் இளைஞர் போலீஸுக்கு சவால் விடுவது போல ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது கோவை பொள்ளாச்சியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவருக்கு பேஸ்புக் எனப்படும் முகநூலிலிருந்து திருநாவுக்கரசு என்ற இளைஞர் பிரண்ட்ஸ்
 

முகநூல் மூலம் பழகி, ஆபாச வீடியோ எடுத்து  நகை பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டுவரும் இளைஞர் போலீஸுக்கு சவால் விடுவது போல ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது

கோவை : முகநூல் மூலம் பழகி, ஆபாச வீடியோ எடுத்து  நகை பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டுவரும் இளைஞர் போலீஸுக்கு சவால் விடுவது போல ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது

கோவை பொள்ளாச்சியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவருக்கு பேஸ்புக் எனப்படும் முகநூலிலிருந்து திருநாவுக்கரசு என்ற இளைஞர் பிரண்ட்ஸ் ரிக்வெஸ்ட் கொடுத்துள்ளார். அவரின் முகநூல் நட்பை அந்த கல்லூரி மாணவியும் ஏற்றுக்கொள்ள, தொடர்ந்து பேச ஆரம்பித்த திருநாவுக்கரசு அவனது ஸ்டைலான புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பதிவிட்டதன் மூலம் அந்த மாணவியை ஈர்த்துள்ளான். அவனை நம்பிய அந்த கல்லூரி மாணவி அவனுடன் மணி கணக்காகக் கண்விழித்து சாட்டிங் செய்துள்ளார். 

இந்த நட்பானது காதலாக மாற திருநாவுக்கரசு மாணவியிடம் தன்னிடம் சொகுசு கார் இருக்கிறது. வந்தால் பல இடங்களுக்குச் சென்று வரலாம் என கூறியுள்ளான். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அந்த மாணவியும் ஆசை ஆசையாகத் தனது பேஸ்புக் காதலனை சந்திக்க சென்றுள்ளார். கார் செல்ல செல்ல அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான் திருநாவுக்கரசு. அப்பொழுது முன் இருந்த நபர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர். கொஞ்சம் தாமதமாகச் சுதாரித்துக்கொண்ட மாணவி கூச்சலிட்டுக் கத்தியுள்ளார். 

இதையடுத்து மாணவியை மிரட்டிய அந்த கும்பல், கழுத்திலிருந்த  தங்க செயினை பறித்துக்கொண்டதோடு,   கேட்கும்போது எல்லாம் பணம் தரவேண்டும் என மிரட்டிவிட்டு ஊஞ்சவேலன்பட்டி என்ற இடத்தில்  நடு ரோட்டில் இறக்கிவிட்டுச் சென்றது. இதை தொடர்ந்து அந்த மாணவியை அந்த கும்பல் மிரட்டியதால், அந்த மாணவி தந்தையிடம் கூற, அவர் உடனே பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.  

விசாரணையில் இறங்கிய காவல்துறை சதீஷ், சபரீசன், வசந்தகுமார் என்ற மூன்று நபரை கைது செய்ததோடு  மூன்று ஸ்மார்ட் போன்கள், ஒரு வாக்ஸ் வேகன் சொகுசு கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.  தொடர் விசாரணையில், சுமார் 200க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், 60 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை முகபுத்தக்கம் மூலம் காதல்வலை வீசி காதலிப்பதாகக் கூறி நேரில் வரவைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு  அதனை படமெடுத்து அதை அவர்களிடமே காட்டி மீண்டும் உல்லாசம் அனுபவிப்பது மற்றும் பணம் கேட்டு மிரட்டுவது என தொடர் செயல்களில் அவர்கள்  ஈடுபட்டு வந்ததது தெரியவந்தது. 

இந்நிலையில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவான நிலையில்,  திருநாவுக்கரசு பேசியதாக கூறி ஆடியோ ஒன்று காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் பெண்களை மயக்கி ஆபாச வீடியோ எடுத்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், புகார் அளித்த ஒரு பெண் மட்டுமே போலீசுக்கு ஆதரவாக இருப்பதாகவும் 99 பெண்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் அதில் திருநாவுக்கரசு தெரிவித்திருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த ஆடியோவின் உண்மைத் தன்மை குறித்து திருநாவுக்கரசின் தந்தை கனகராஜை அழைத்து விசாரித்து வரும் காவல்துறையினர் தலைமறைவாக உள்ள திருநாவுக்கரசுவை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துத் தேடி வருகின்றனர்.

இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் வலியுறுத்தி வரும் நிலையில்,  தலைமறைவாக உள்ள திருநாவுக்கரசுவை பிடித்து விசாரித்தால் இதன் பின்னணியில் உள்ள பிரமுகர்கள் குறித்த உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.