×

‘படுக்கையறையில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவன்’ : பெற்றோரே அடித்துக் கொலை செய்த கொடூரம் !

கடந்த மே மாதம் ஏஜே அவனது படுக்கையறையிலேயே போட்டிருந்த உடையுடன் சிறுநீர் கழித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஜோயன் சிறுவனை பலமாக அடித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் என்னும் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூ ப்ரூயண்ட்- ஜோயன் குன்னிங்கம் தம்பதி. இவர்களுக்கு ஏஜே ப்ரூயண்ட் என்ற 5 வயது மகன் இருக்கிறான். கடந்த மே மாதம் ஏஜே அவனது படுக்கையறையிலேயே போட்டிருந்த உடையுடன் சிறுநீர் கழித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஜோயன் சிறுவனை பலமாக அடித்துள்ளார். அதன் பின்னர் வீட்டிற்கு வந்த
 

கடந்த மே மாதம் ஏஜே அவனது படுக்கையறையிலேயே போட்டிருந்த உடையுடன் சிறுநீர் கழித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஜோயன் சிறுவனை பலமாக அடித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் என்னும் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூ ப்ரூயண்ட்- ஜோயன் குன்னிங்கம் தம்பதி. இவர்களுக்கு ஏஜே ப்ரூயண்ட் என்ற 5 வயது மகன் இருக்கிறான். கடந்த மே மாதம் ஏஜே அவனது படுக்கையறையிலேயே போட்டிருந்த உடையுடன் சிறுநீர் கழித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஜோயன் சிறுவனை பலமாக அடித்துள்ளார். அதன் பின்னர் வீட்டிற்கு வந்த ஆண்ட்ரூவிடம் ஜோயன் இதனைக் கூறியுள்ளார். ஆண்ட்ரூவும் சேர்ந்து சிறுவனை பலமாக அடித்துள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆண்ட்ரூ மற்றும் ஜோயன், சிறுவனின் உடலை வீட்டிலிருந்து எடுத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் புதைத்துள்ளனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவன் ஏஜேவின் தாய் ஜோயன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவருக்கு 20 முதல் 60 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஜோயனுக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது. இதனிடையே, சிறுவனின் தந்தை ஆண்ட்ரூ மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.