×

விஷமிகள் செயலால் உயரும் பலி எண்ணிக்கை: இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு!

இலங்கை முழுவதும் இன்று இரவு முதல் அவசர நிலை பிரகடனம் அறிவித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன கொழும்பு: இலங்கை முழுவதும் இன்று இரவு முதல் அவசர நிலை பிரகடனம் அறிவித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன. இலங்கையின் பல்வேறு இடங்களில் நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தலைநகர் கொழும்புவில் உள்ள, ஷாங்கரி லா நட்சத்திர விடுதி, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி மற்றும் சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் சரியாக
 

இலங்கை முழுவதும் இன்று இரவு முதல் அவசர நிலை பிரகடனம் அறிவித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன

கொழும்பு: இலங்கை முழுவதும் இன்று இரவு முதல் அவசர நிலை பிரகடனம் அறிவித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன.

இலங்கையின் பல்வேறு இடங்களில் நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தலைநகர் கொழும்புவில் உள்ள, ஷாங்கரி லா நட்சத்திர விடுதி, கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர்கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி மற்றும் சின்னமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் சரியாக காலை 8.45 மணிக்கு வெடிகுண்டுகள் வெடித்தன.   இந்த திட்டமிடப்பட்ட கொடூர தாக்குதலில் தேவாலயங்களில் பிரார்த்தனையில் பங்கேற்றிருந்த பலரும் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதை தொடர்ந்து மீண்டும் பிற்பகல் 2  மணியளவில் தெஹிவளையில் உள்ள நட்சத்திர ஹோட்டலிலும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.

இந்த தாக்குதலில் இதுவரை சுமார் 300ற்கும் மேற்பட்டோர்  உயிரிழந்ததுடன்,  500ற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 6 பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில், இந்தியா, போர்ச்சுக்கல், துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். இலங்கை மீதான இந்த தாக்குதலுக்கு, பல்வேறு நாடுகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறது. 

இந்நிலையில், இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிபர் சிறிசேன அவசர நிலையையும் அறிவித்துள்ளார். அதேபோல், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்திய அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்  என்றும்  இந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு, உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும்  வாசிக்க: உளவுத்துறையின் அலட்சியம்; இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணம் தற்கொலைப் படை