×

முன்னாள் கணவரின் மனைவியை ஃபேஸ்புக்கில் குதிரை என திட்டிய பெண்ணுக்கு சிறை!

கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்த அவர், தனது மகளுடன் பிரிட்டன் சென்று விட்டார். அவரது கணவர் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இருந்துள்ளார் துபாய்: முன்னாள் கணவரின் மனைவியை குதிரை என ஃபேஸ்புக்கில் திட்டிய பிரிட்டிஷ் பெண் துபாயில் சிறை வைக்கப்பட்டுள்ளார். லண்டனை சேர்ந்த லாலெ ஷ்ரவேஷ்க்கு (55), திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. திருமணமான சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சில மாதங்கள் இவர் இருந்துள்ளார். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை
 

கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்த அவர், தனது மகளுடன் பிரிட்டன் சென்று விட்டார். அவரது கணவர் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இருந்துள்ளார்

துபாய்: முன்னாள் கணவரின் மனைவியை குதிரை என ஃபேஸ்புக்கில் திட்டிய பிரிட்டிஷ் பெண் துபாயில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

லண்டனை சேர்ந்த லாலெ ஷ்ரவேஷ்க்கு (55), திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. திருமணமான சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சில மாதங்கள் இவர் இருந்துள்ளார். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்த அவர், தனது மகளுடன் பிரிட்டன் சென்று விட்டார். அவரது கணவர் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இருந்துள்ளார். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர்.

இதனிடையே, தனது முன்னாள் கணவர் மறுமணம் செய்துகொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துல்லதை பார்த்த லாலெ ஷ்ரவேஷ், “முட்டாள், நீ மண்ணில் புதைந்து விட்டதாக நம்புகிறேன். நாசாமாக போ..இந்த குதிரைக்காகதான் என்னை விட்டுவிட்டாயா” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், தனது கணவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள துபாய் சென்ற லாலெ ஷ்ரவேஷ் அந்நாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டால் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க, ஐக்கிய அரபு அமீரக சைபர் குற்றவியல் சட்டம் வழிவகை செய்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

துபாயில் தற்போது வசித்து வரும் லாலெ ஷ்ரவேஷின் முன்னாள் கணவரது மனைவியிடம், புகாரை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதனை ஏற்க அவர் மறுப்பு தெரிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

அரசியல் பதிவு போட்டவரை வீட்டுக்கு சென்று மிரட்டிய ஃபேஸ்புக் நிறுவனம்!?