×

பிரான்சில் கொரோனா பலி எண்ணிக்கை 7560ஆக அதிகரிப்பு

பிரான்சில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7560-ஆக அதிகரித்துள்ளது. பாரிஸ்: பிரான்சில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7560-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 64 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 12 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 2 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை
 

பிரான்சில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7560-ஆக அதிகரித்துள்ளது.

பாரிஸ்: பிரான்சில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7560-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 64 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 12 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 2 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7560ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவுக்கு அடுத்து 4-வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிரான்ஸ் நாட்டில் 1053க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் 89,953 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 15,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.