×

பிரசவத்தையும் ரகசிய கேமராவால் ஆபாசமாக படம் பிடித்த கொடூரம்; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வந்த பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா: பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வந்த பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவை இன்று அன்றாட செய்தியாகி விட்டது. ஆனால் இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு கொடூரம் ஒன்று அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் சான்டிகோ நகரத்தில் ‘ஷார்ப் கிராஸ்மொண்ட்’ என்ற
 

பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வந்த பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​​​​​​​

கலிபோர்னியா: பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வந்த பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழகம் மட்டுமல்ல உலகம்  முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவை இன்று அன்றாட செய்தியாகி விட்டது. ஆனால்  இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு கொடூரம் ஒன்று அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. 

அமெரிக்காவின் சான்டிகோ நகரத்தில் ‘ஷார்ப் கிராஸ்மொண்ட்’ என்ற மருத்துவமனையில் கருத்தடை,கருத்தரிப்பு, கருச்சிதைவு, பிரசவம் போன்ற  பெண்களுக்கான சிறப்பு  சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. 

இந்நிலையில் பிரசவம் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக சிகிச்சைக்காக வரும்  1800 பெண்களை ரகசிய கேமராக்கள் மூலம் ஆபாசமாகப் படம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது. பிரசவத்தில் குழந்தை பிறப்பது, கருத்தரிப்பு உள்ளிட்ட விஷயங்களை அவர்களின் அனுமதியே இல்லாமல், பெண்களுக்கு மயக்க மருந்து கொண்டு ரகசியமாகப் படம்பிடித்தது தெரியவந்துள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்துள்ளார்கள். அதில், இந்த செய்தியால் மருத்துவமனை இருந்த நம்பகத்தன்மை இழந்து விட்டோம். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் மற்றும் பயம் ஏற்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளனர். மருத்துவமனை மீது இதுவரை 81 பெண்கள்  வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: வீட்டை விட்டு வெளியேறியதால் நடந்த கொடூரம்!