×

பாகிஸ்தான் ரயிலில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு!

ரயில் நேற்று அதிகாலை லியாகத்ப்பூர் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ரயில் பெட்டி ஒன்றில் திடீரென்று தீ பிடித்தது. பாகிஸ்தானில் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் தேஜ்காம் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் கராச்சி – ராவல்பிண்டிக்கு இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ரயில் நேற்று அதிகாலை லியாகத்ப்பூர் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக ரயில் பெட்டி ஒன்றில் திடீரென்று தீ
 

ரயில் நேற்று அதிகாலை லியாகத்ப்பூர்  அருகே வந்த போது  எதிர்பாராத விதமாக  ரயில் பெட்டி  ஒன்றில் திடீரென்று  தீ பிடித்தது.

பாகிஸ்தானில் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.  

பாகிஸ்தானில் தேஜ்காம் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் கராச்சி – ராவல்பிண்டிக்கு இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த ரயில் நேற்று அதிகாலை லியாகத்ப்பூர்  அருகே வந்த போது  எதிர்பாராத விதமாக  ரயில் பெட்டி  ஒன்றில் திடீரென்று  தீ பிடித்தது. பின்னர் அடுத்தடுத்த பெட்டிகளுக்கு தீ மளமளவெனப் பரவின. இதனால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. 

இந்த தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.   மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.  இறந்த பெரும்பாலானவர்கள் இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற மதபோதகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.