×

பள்ளியில் துப்பாக்கி சூடு: மாணவன் ஒருவர் பலி; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலராடோ: அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தின் தலைநகர் டென்வர் பகுதியில் அமைந்துள்ள ஸ்டெம் பள்ளியில் சுமார் 1300 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த பள்ளியில், நேற்று மதியம் புகுந்த மர்ம நபர்கள் இருவர்
 

அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கொலராடோ: அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தின் தலைநகர் டென்வர் பகுதியில் அமைந்துள்ள   ஸ்டெம் பள்ளியில் சுமார் 1300 மாணவர்கள் படிக்கிறார்கள்.  இந்த பள்ளியில், நேற்று மதியம் புகுந்த மர்ம நபர்கள் இருவர் சரமாரியாகச் சுட்டனர். 

இந்த கொடூர தாக்குதலில் 15 வயதான மாணவர் ஒருவர் பலியானார். மேலும் 8ற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. காயம் அடைந்த மாணவர்கள்  அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த குற்றத்தை நிகழ்த்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் ஸ்டெம் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. கைதான இருவரிடமும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.