×

பர்தாவை கழட்டிவிட்டு வந்தால்தான் சிகிச்சை; மருத்துவமனையில் அராஜகம்?!…

பொடு பால சேனா என்பது சிங்கள புத்த தேசியவாத அமைப்பு, 2014-ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த அமைப்பு. இலங்கை குண்டுவெடிப்புகள்; இந்துத்துவத்தை பின்பற்றும் பவுத்தம் – அடிமைகளாக்கப்படும் இஸ்லாமியர்கள் இலங்கையில் ஈஸ்டர் அன்று தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 300-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர், 500-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்பிறகும் குண்டுவெடிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த குண்டுவெடிப்புகள் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள்
 

பொடு பால சேனா என்பது சிங்கள புத்த தேசியவாத அமைப்பு, 2014-ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த அமைப்பு.

இலங்கை குண்டுவெடிப்புகள்; இந்துத்துவத்தை பின்பற்றும் பவுத்தம் – அடிமைகளாக்கப்படும் இஸ்லாமியர்கள்

இலங்கையில் ஈஸ்டர் அன்று தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 300-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர், 500-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்பிறகும் குண்டுவெடிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இந்த குண்டுவெடிப்புகள் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மேல் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இந்த குண்டுவெடிப்புகளுக்கு எல்லாம் காரணம் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள்தான் என பெரும்பான்மையான மக்கள் மனதில் பதிந்துவிட்டது. அது தற்போது இஸ்லாமிய வெறுப்பாக மாறியிருக்கிறது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 30-க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இஸ்லாமிய வெறுப்பு எந்த அளவுக்கு வேரூன்றிப் போயிருக்கிறது என்றால், தன் குழந்தைக்கு சிகிச்சை பெற சென்ற இஸ்லாமிய பெண்ணை பர்தாவை கழட்டிவிட்டு வந்தால்தான் சிகிச்சை அளிப்போம் என சொல்லியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம் ஒன்று. இது இலங்கை வானொலி மூலம் கிடைத்த அதிகாரப்பூர்வ செய்தி என கூறப்படுகிறது.

இந்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டி, இஸ்லாமிய இயக்கங்கள் இலங்கை மீது ஏன் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை பார்க்க வேண்டியுள்ளது. இலங்கையில் இஸ்லாமியர்கள் குடியேற்றம் அதிகரிப்பதாக ஒரு சாரார் தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் பவுத்தர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே பகை மூண்டிருக்கிறது. தற்போது இலங்கை மக்கள் தொகையை ஆராய்ந்தால், பவுத்தர்கள் 70.2%, இந்துக்கள் 12.6%, இஸ்லாமியர்கள் 9.7% மற்றும் கிறிஸ்தவர்கள் 7.4% முறையே இருக்கின்றனர்.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து பொய் செய்திகள் பரவுவதை தவிர்க்க இணையதளம் முடக்கப்பட்டிருக்கிறது. நேற்று srilankamirror.com இப்படி ஒரு செய்தியை வெளியிட்டு உடனடியாக டெலிட் செய்திருக்கிறது. அதாவது இலங்கை குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணம் என கூறப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும், பிபிஎஸ் ( BBS – Bodu Bala Sena) எனும் புத்த தேசிய அமைப்புக்கும் ஒரே ரகசிய வங்கிக் கணக்கில் இருந்து பணம் செல்கிறது என அந்த செய்தி தலைப்பிடப்பட்டிருக்கிறது.

பிபிஎஸ் ( BBS – Bodu Bala Sena)

பொடு பால சேனா என்பது சிங்கள புத்த தேசியவாத அமைப்பு, 2014-ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த அமைப்பு.

இந்த அமைப்புக்கும் இஸ்லாமிய தீவிராவத அமைப்பு என கூறப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு ஒரே வங்கிக் கணக்கில் இருந்து ஏன் பணம் செல்ல வேண்டும் என்ற கேள்வி எஞ்சி நிற்கிறது.

இந்துத்துவத்தை பின்பற்றும் பவுத்தம்

இங்கு இந்தியாவில் அனைவருக்கும் காவி டவுசர் மாட்ட துடிக்கிறது இந்துத்துவம். புத்தர் அன்பை போதித்தார் என்று கூறினாலும், பவுத்தர்கள் அனைவரையும் அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. இந்துத்துவ கொள்கைகள் சிலவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு இயங்கும் பவுத்த பிரிவுகளும் இருக்கிறது! இவை எல்லாவற்றுக்கும் மேலாக மியான்மரில் ரோகிங்கியா இஸ்லாமியர்களை பவுத்தர்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்ததை மறக்க முடியாது.

தற்போது இலங்கையில் இருக்கும் 70% பவுத்தர்களுக்கு தங்கள் மத நம்பிக்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மத நம்பிக்கையை உடைய இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும்தான் பிரச்சனை. இதுபோக அங்கு தமிழர்கள் இருப்பது ஒரு பிரச்சனை.

இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்ட இடங்களில் பெரும்பான்மையானவை தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்றும் கூறப்படுகிறது. தற்போது பவுத்தர்களின் கை மேலோங்கி இருக்கிறது. இதன்மூலம் முழுக்க முழுக்க இலங்கையை பவுத்த தேசமாக மாற்றும் முயற்சியை செயல்படுத்த அந்த அரசாங்கம் முனைப்பு காட்டலாம்.

அரசியல் அடிமைகள், அடியாட்களாக செயல்படும் இஸ்லாமியர்கள்

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வேளையில், அவர்களின் உண்மையான நிலை என்ன என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் அவர்களுக்குள்ளேயே மத ரீதியான சில ஒடுக்குமுறைகள் இருக்கிறது. அதுபோக அமெரிக்கர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. globalresearch.ca என்ற வலைதளம், அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கங்கள் உருவாக முக்கிய காரணமே அமெரிக்காதான் என ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. தீவிரவாதத்தை வளர்த்துவிட்டு, தீவிராதத்தின் மீது போர் தொடுக்கிறேன் என்பதும் தீவிரவாதம்தான் என அந்த ஆய்வில் ஒரு வரி குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்க வேண்டியது.

ஈரான் அரசாங்கம், அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கம் என பிரகடனப்படுத்த இருப்பதற்கு வெவ்வேறு நாடுகள் வரவேற்பு அளிப்பது இதனால்தான். இலங்கை பிரச்சனையில் அமெரிக்கா வேக வேகமாக மூக்கை நுழைக்கிறது. நாங்கள் இலங்கையில் இதுபோல் நடக்கும் என முன்பே எச்சரித்தோம் என்றெல்லாம் அறிக்கை விடுகிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை அந்த மண்ணை விட்டு விரட்டிவிட்டு பவுத்தத்தை நிலைநாட்ட நினைக்கும் பவுத்தர்களுக்கு அமெரிக்கா உதவுவதன் மூலம் அவர்கள் இலங்கை அரசிடம் தங்களுக்கு தேவையானவற்றை பெற முடியும் என நினைக்கலாம்!.. இவற்றை அறியாமல் அரசியல் அடியாட்களாகவும், அடிமைகளாகவும் செயல்பட்டு வருகிறது சில இஸ்லாமிய இயக்கங்கள்.

ரா. அருண் பாண்டியன்

இதையும் வாசிங்க: இஸ்லாமியர்கள் உயிருக்கு அச்சுறுத்தல்; என்ன நடக்கிறது இலங்கையில்?!…