×

தொடரும் விமான விபத்து: 136 பயணிகளுடன் ஆற்றில் பாய்ந்த விமானம்!?

136 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடா: 136 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவில் உள்ள ஜாக்சன்விலே கடற்படை விமான நிலையத்துக்குக் கியூபாவின் குவாண்டனமோ கடற்படை தளத்திலிருந்து போயிங் 737 ரக விமானம் ஒன்று வந்தது. அதில் 136 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக ஜான்ஸ் ஆற்றில் திடீரென்று பாய்ந்தது. இதனால் விமானத்தில் பயணம் செய்த விமானிகள் பயத்தில் அலறினர். இருப்பினும் அந்த ஆற்றில் ஆழம் குறைவாக இருந்ததால்,
 

136 பயணிகளுடன் பயணித்த  விமானம் ஒன்று  ஆற்றுக்குள் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புளோரிடா: 136 பயணிகளுடன் பயணித்த  விமானம் ஒன்று  ஆற்றுக்குள் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புளோரிடாவில் உள்ள ஜாக்சன்விலே கடற்படை விமான நிலையத்துக்குக்  கியூபாவின்  குவாண்டனமோ  கடற்படை தளத்திலிருந்து போயிங் 737 ரக விமானம் ஒன்று வந்தது. அதில் 136 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் தரையிறங்கும் போது  எதிர்பாராத விதமாக ஜான்ஸ் ஆற்றில்   திடீரென்று பாய்ந்தது. 

இதனால் விமானத்தில் பயணம் செய்த விமானிகள் பயத்தில் அலறினர். இருப்பினும் அந்த ஆற்றில் ஆழம் குறைவாக இருந்ததால், விமானம் ஆற்றில் மூழ்கவில்லை. இதன் காரணமாக எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. 

முன்னதாக எத்தியோப்பியா போயிங் 737 ரக  விமான விபத்தில் 149 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.