×

தென்கொரியாவில் கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பலியானோர் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது. சியோல்: தென்கொரியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பலியானோர் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. சீனா தவிர தென்கொரியா, இத்தாலி, ஜப்பான், ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.
 

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பலியானோர் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது.

சியோல்: தென்கொரியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பலியானோர் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. சீனா தவிர தென்கொரியா, இத்தாலி, ஜப்பான், ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை 60 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென்கொரியாவில் வைரஸ் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு 5 ஆயிரத்து 328 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 3110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 92 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.