×

தங்கையின் சடலத்தின் அருகில் வளர்ப்பு தாயுடன் உறவு வைத்து கொண்ட 16 வயது சிறுவன்: ஆபாச வீடியோக்களால் நேர்ந்த கொடூரம்!

வளர்ப்பு தங்கையுடன் அத்துமீறியதோடு அவளை அண்ணனே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா: வளர்ப்பு தங்கையுடன் அத்துமீறியதோடு அவளை அண்ணனே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவுக்கு உட்பட்ட ஜகார்த்தா பகுதியில் சிறுவர்கள் இருவர் ஆபாச வீடியோக்களை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். அப்படி சம்பவத்தன்று ஆபாச வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த இரு சகோதரர்களும் தங்களது 5 வயதான வளர்ப்பு தங்கையிடம் அத்துமீறியுள்ளனர். இதை இவர்களின் வளர்ப்புத் தாய் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த
 

வளர்ப்பு தங்கையுடன் அத்துமீறியதோடு அவளை  அண்ணனே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தோனேசியா: வளர்ப்பு தங்கையுடன் அத்துமீறியதோடு அவளை  அண்ணனே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தோனேசியாவுக்கு உட்பட்ட ஜகார்த்தா பகுதியில் சிறுவர்கள் இருவர் ஆபாச வீடியோக்களை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். அப்படி சம்பவத்தன்று ஆபாச வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த இரு சகோதரர்களும் தங்களது  5 வயதான வளர்ப்பு தங்கையிடம்  அத்துமீறியுள்ளனர். இதை இவர்களின் வளர்ப்புத் தாய் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த 16 வயது சிறுவன் அந்த சிறுமியை அடித்து கொலை செய்துள்ளான். இதையடுத்து செய்வதறியாது திகைத்த அவர்கள்  சிறுமியின் உடலை  சிமிந்திரி ஆற்றின் அருகே உள்ள மூங்கில் காட்டுப் பகுதியில் புதைத்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து கூறியுள்ள போலீசார், ஆபாச வீடியோக்களுக்கு அந்த சிறுவர்கள்  அடிமையாக இருந்ததாகவும், அதில் 16 வயது சிறுவன் சிறுமியைப் புதைப்பதற்கு முன்பு, அவளது சடலத்திற்கு அருகிலேயே வளர்ப்புத் தாயுடன் உறவில் ஈடுபட்டுள்ளான் என்றும் அதிர்ச்சிகர தகவலைக் கூறியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து சிறுமியை வளர்த்த தாய் மற்றும் அவரது வளர்ப்பு மகன்கள் உள்ளிட்ட 3 பேர் மீதும்  போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற கொடூரமான செயலில் ஈடுபட்ட இவர்களின் மனநலம் குறித்துப் பரிசோதித்து  வருகின்றனர்.