கொரோனாவால் முடங்கிய சீனா…ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை!
குறிப்பாக சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதுவரை கொரோனா வைரஸ் 27 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த சீன மற்றும் அமெரிக்க அரசுகள் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். குறிப்பாக சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் இதுவரை 1016 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சீன அரசு செய்வதறியாது முடங்கி போயுள்ளது.
குளிர்காலத்தில் நோய் தொற்றுக்கள் அதிகரிக்கும் நிலையில் கோடைக்காலம் ஆரம்பமானால் கொரோனா வைரஸ் நீங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது.