கொரோனாவ நினைச்சு கவலை படாதீங்க… இந்தாங்க இலவச ஐபோன் – அசத்தும் ஜப்பான் அரசு
ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளுக்கு 2 ஆயிரம் ஐபோன்களை ஜப்பான் அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
ஹாங்காங் சென்று திரும்பிய அந்தக் கப்பலில் கொரானா தொற்றால் முதியவர் ஒருவர் பலியானதை அடுத்து, யோகோஹாமா பகுதியில் தனிமைப்படுத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 3,700 பயணிகளில் ஏற்கனவே 454 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கப்பலில் உள்ள பயணிகளுக்கு 2 ஆயிரம் ஐபோன்களை ஜப்பான் அரசு இலவசமாக வழங்கியுள்ளது. மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கவும், மருந்துகள் குறித்த அறிவுறுத்தல்களை பெறுவதற்காகவும் லைன் ஆப் எனும் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டு ஐபோன்கள் வழங்கப்பட்டுள்ளன.