கொரோனா வைரஸ்: தீவிர கிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர்
அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதில் உலகின் முக்கிய தலைவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதில் உலகின் முக்கிய தலைவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவித்ததோடு அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது சாதாரண வார்டிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் கலக்கத்தில் உள்ள அந்நாட்டு மக்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.